Passover

நமது கர்த்தராகிய கிறிஸ்துவின் ஞாபகார்த்த நாள் –பஸ்கா – 2025

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2025இல் வரும்   ஏப்ரல் 12  சனிக்கிழமை. பஸ்கா நாள் (ஆபீப் மாதம் 14ஆம் நாள்) ஏப்ரல் 12ஆம் தேதி சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது.  ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது.

(2025 ஏப்ரல் 12 சூரிய அஸ்தமன நேரம் 18:21)

பிறை பார்த்தல் அறிக்கை:

இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி மார்ச் 30 (ஞாயிற்று கிழமை) மாலை 19:20 மணிக்கு முதல் பிறை இஸ்ரேலில் காணப்பட்டது. ஆகவே மார்ச் 30 அந்திநேரத்துக்கு பின்பு புதிய வருடத்தின் முதல் நாள் ஆரம்பிக்கிறது.

இந்த வருடத்தில் (2025) ஆபீப் 1ஆம் நாள்  மார்ச் 30 அன்று அந்திநேரத்தில் இருந்து மறுநாள் மார்ச் 31ஆம் தேதி அந்திநேரம் வரை. ஆகவே ஆபீப் 14 ஆம் நாள், ஏப்ரல் 12ஆம் தேதி (சனிக்கிழமை) அந்திநேரத்தில் இருந்து மறுநாள் 13ஆம் தேதி அந்திநேரம் வரை.

Israel-Based Observation:

The search for first reports of a visible crescent by witnesses within Israel

Confirmed: Sunday evening, March 30, 2025

Jordan, Israel

Tziona Yisrael and one other person (7:17 p.m. UTC+3)

Bible Hill Jerusalem, Israel

Family Ben-Gad and 9 other people (7:20 p.m. UTC+3)


Haifa, Israel and Others via secondary website

Nazarene Israel Group (7:05 p.m. UTC+3)

பார்லி பசுங்கதிர் அறிக்கை - March 2025

பார்லி அறிக்கை: மார்ச்

கதிர்க்கட்டு அசைவாட்டும் பலிக்கு போதுமான அளவு விளைந்திருக்க வேண்டும். ஆபீப் மாதம் 16ம்தேதி கதிர்க்கட்டு நெருப்பில் வாட்டி புசிப்பதற்கு போதுமான அளவு காய்ந்த நிலையை அடைய வேண்டும்.

Aviv Barley Report: Positive

நன்கு விளைந்த பார்லே கதிர்கள் இஸ்ரேலில் காணப்படுகிறது என்ற அறிக்கை
வந்திருக்கிறது. ஆகவே வரும் முதல் பிறை புதிய வருடத்தின் முதல் நாள்
(ஆபீப் 1ம் நாள். ) என அறிவிக்கப்படும். ஆகவே புதிய வருடத்தின் முதல் மாதம் ( Rosh Chodesh – 2025) மார்ச் மாதம் 30ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது.

உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், … பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.
Numbers 10:10

1Corinthians 11:25,26

அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து:

இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறதுநீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்துஇந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.